தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!

 
tuticorin

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Murugan

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

local holiday


இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.