2 டோஸ் தடுப்பூசி போடாத பயணிகள் - ஒரேநாளில் 2,177 பேருக்கு அனுமதி மறுப்பு!!

 
ttn

சென்னை புறநகர் ரயிலில் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத 2,177 பேருக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

train

சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்கும் நபர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்,  பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்,  தடுப்பூசி செலுத்தாமல் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அத்துடன் இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஜனவரி 31ஆம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

train

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா  தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லாமல் வந்த 2,117 பயணிகளுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத 31 நபர்களிடமிருந்து 15 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.