சென்னையில் 15 வயது சிறுமியை... போலீஸ் இன்ஸ்பெக்டர், டிவி நிருபர் உள்பட 21 பேர் குற்றவாளிகள்

 
வ்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 21 பேர் குற்றவாளிகள் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னையில் வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி,   பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின்  உறவினர் சஹிதா பானு,  உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி,  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி , பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜன், மாரீஸ்வரன், பொன்ராஜ் , மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக் ,திரிபுராவை சேர்ந்த தெபாஷிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வண்ணாரப்பேட்டை போலீசார் 22 பேரை கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அன்று கைது செய்தனர்.

ட்வ்

 26 பேரில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் தலைமறைவாகிவிட்டதை அடுத்து மீதம் இருந்த 22 பேர்களில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டதால் மீதம் இருக்கும் 21 பேர்கள் மீது குற்றச்சாட்டுகள் தொடர்பாக சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி,  மதன்குமார் சந்தியா, செல்வி, சாயிதாபானு,  கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, ராஜேந்திரன்,   அசாருதீன், பசுபதி, வினோபாஜி,  கிரிதரன், ராஜா சுந்தர் ,நாகராஜ்,   கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என்று தீர்மானித்த அறிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.    இவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும்19 ஆம் தேதி செல்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.