20,000 பணியிடங்கள்.. SSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

 
20,000 பணியிடங்கள்..  SSC  வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

 
மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 20,000க்கும் மேற்பட்ட குரூப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ள அந்தப் பணியிடங்களுக்கு விருப்பமும்,  தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மத்திய அரசுத்  துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை,  எஸ்.எஸ்.சி  எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் தற்போது   பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  
 

துறை  :  மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC)

மொத்த காலிப்பணியிடங்கள்  - 20,000

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை.. மாதம் ரூ. 63,000 சம்பளம்..

பணி விவரம்  :  குரூப் 'பி' பதவிகள்

Assistant Audit Officer , Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax,  Inspector, (CGST & Central Excise),  Inspector (Preventive Officer),  Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Assistant/ Superintendent, Research Assistant, Divisional Accountant, Sub Inspector, Junior Statistical Officer (JSO), Statistical Investigator Grade-II

குரூப் 'சி' பதவிகள்

Auditor, Accountant/ Junior Accountant,  Senior Secretariat Assistant/ Upper Division Clerks , Tax Assistant

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில்  இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :   18 வயது முதல் 30 வயது வரை  இருக்க வேண்டும்.  அரசு அறிவித்துள்ளபடி  குறிப்பிட்ட பிரிவுகளுக்கு  வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்..

சம்பள விவரம்  :  ரூ. 25,500 முதல் ரூ. 1,51,100 /- (   ஒவ்வொரு பதவிகளுக்கும்  படிநிலைகளுக்கு ஏற்ப சம்பள முறை உள்ளது)

விண்ணப்பிக்க கடைசி தேதி  :  08 அக்டோபர் 2022  

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலை.. மாதம் ரூ. 63,000 சம்பளம்..

விண்ணப்பக் கட்டணம்  :  ரூ. 100 ,  பட்டியலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கு  விண்ணப்பக்கட்டணம் கிடையாது.  

தேர்வு செய்யப்படும் முறை :  முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு  மூலம் தேர்வு செய்யப்படுவர்.  ஒரு சில பதவிகளுக்கு கூடுதல் தேர்வு உண்டு..

தேர்வு நடைபெறும் முறை  : கணினி வழி தேர்வு
 
விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன்.   அதிகாரப்பூர்வ இணையதளமான   https://ssc.nic.in/ என்கிற பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.  
 
மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf என்ற அறிவிப்பானையை பார்வையிடவும்..