சிறுமியை கடித்துக் குதறிய 2 வளர்ப்பு நாய்கள் - உரிமையாளர் கைது!
Updated: May 6, 2024, 09:07 IST1714966666118
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/65907a732bb5b910c909869b4e659aa6.png)
சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகள் சுதக்ஷாவை, புகழேந்தி என்பவரது 2 வளர்ப்பு நாய்கள் திடீரென கடித்துக் குதறின. சிறுமி அலறியதைக் கேட்டு காப்பாற்றிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.