சென்னை: நர்சிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

 
நர்சிங்

சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19), என்ற மாணவி இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இன்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு விடுதிக்கு தோழிகளுடன் வந்தவர், தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குள் இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் சுமதி வெளியே வராதால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. கதவை  தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது சுமதி தூக்கு போட்டு தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சக மாணவி சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அவர் அங்கேயே இறந்து போனார். 

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன சுமதி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அவரது பெற்றோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு வந்தனர். அங்கு தனது மகள் இறந்ததை கண்டித்து சாலை மறியல் ஈடுபட முயன்றவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் தற்கொலை செய்து கொண்ட சுமதியின் செல்போனை பறிமுதல் செய்து அவர் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.