18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு!

 

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு  போலீஸ் வலைவீச்சு!

பாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற தனியார் சங்கம் என்ற தனியார் சிறுமிகள் காப்பகம் இயங்கி வருகிறது. இதற்கு கல்யாணசுந்தரம் என்பவர் இயக்குநராக உள்ளார். இங்கு 18 சிறுமிகள் உள்ளனர்.

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு  போலீஸ் வலைவீச்சு!

இந்நிலையில் இந்த காப்பகத்திலிருந்து 1098 என்ற சிறார் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்த சிறுமி இங்கு தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறியுள்ளார். புகாரை தொடர்ந்து காப்பகத்துக்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அங்கிருந்த பாதிக்கப்பட்ட சிறுமிகளான 18 பேரையும் மீட்டனர். உரிமம் பெறாமல் சமூக பொருளாதார கல்வி இல்லம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு  போலீஸ் வலைவீச்சு!

இதை தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். சிறுமிகளிடம் எந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.