நான்கு நாள் ரெய்டில் சிக்கிய 165 கோடி பணம் -200 கோடி மதிப்புள்ள ஆவணங்கள்

 
m

மதுரையில் நான்கு நாட்கள் நடந்த  வருமானவரித்துறை சோதனையில் 14 கிலோ தங்கமும் 165 கோடி ரூபாய் பணமும் 200 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.   ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடு மற்றும்  அலுவலகங்களில் இருந்து நான்கு நாட்கள் நடந்த சோதனை நிறைவு பெற்றதை அடுத்து சோதனையில் கைப்பற்றப்பட்டவை என்னென்ன என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது.

 மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாஸ் சிட்டி, அன்னை பாரத் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது.  பாலு கொத்தனார் என்பவரின் மகன்கள்  ஜெயக்குமார் ,அழகர், முருகன் ,செந்தில்குமார் ,சரவணகுமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் .

ச்ச்

கட்டுமான நிறுவனத்தில் வடிவமைப்பு அளவுக்கு அதிகமான சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கவரித்துறையினர் டெல்லி, ஹைதராபாத், சென்னை, கோவை ,மதுரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 36-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்து இருபதாம் தேதி காலை 7:00 மணிக்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 2ம் நாள்  நடந்த சோதனையில் கிளாட் வே சிட்டியில் உள்ள பங்குதாரரில் ஒருவரான முருகனின் வீட்டில் இருந்து 25 கோடி ரூபாய் பணமும் 3 கிலோ தங்கமும் 93 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.  3வது நாள் சோதனையில் மூணு கிலோ தங்கமும் ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பிலான பணமும் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டன.   இதன் பின்னர் என்று 23ஆம் தேதி நடந்த சோதனைகளில் சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்து 3 கிலோ தங்கம் பல கோடி மதிப்பிலான பணம், வைரம் ஆவணங்களை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

 மொத்தமாக நான்கு நாட்கள் நடந்த வருமான வரித்துறையில் சோதனையில் ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 14 கிலோ தங்கம் 165 கோடி ரூபாய் பணமும் 200 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.

 வருமானவரித்துறையினர் கைப்பற்றி இருக்கும் நகைகளின் முழு மதிப்பீடு விவரம் பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.