புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி, மயக்கம்..

 
பிரியாணி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஹோட்டலில்  பிரியாணி வாங்கி சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  

 புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி, மயக்கம்..

 அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் என்பவர்,   தனக்கு சொந்தமான வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்து  வந்துள்ளார்.  அவரது வீட்டில்  மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று,   வீட்டில் கட்டிட வேலை செய்பவர்களுக்கு மதிய உணவுக்காக, அறந்தாங்கியில் உள்ள் ஒரு உணவகத்தில் இருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி வந்துள்ளார்.  அதனை சாப்பிட்ட 15  கட்டிடத் தொழிலாளர்களுக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.  

 புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி, மயக்கம்..

இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் சித்திரைவேல்,  உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அனைவரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப்போன உணவா?? அல்லது கெட்டுப்போன இறைச்சியா? என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரம் ஓய்வதற்குள், பிரியாணி சாப்பிட்டு 15 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.