சென்னை -அந்தமான்: 14 விமான சேவை 18 வரை ரத்து

 
ஃப்

சென்னை -அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் வரும் 18ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணி மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .

ஐ

யூனியன் பிரதேசமான அந்தமான்.   சுற்றுலாத்தலமாக விளங்கும் அந்தமானில் இருந்து கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  சென்னை -அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் பதினெட்டாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  அந்தமானில் போர்ட் பிளேர் விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்பு  பணிகள் காரணமாக,  மோசமான வானிலை காரணமாகவும் விமான சேவையை மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக போர்ட் விமான நிலையத்தின்  டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 போர்ட் பிளேயரில் உள்ள வீர சவார்க்கர் விமான நிலையத்தில் ஒரே ஒரு ஓடு பாதை மட்டுமே உள்ளது.  இதனால் போர்ட் பிளேருக்கு வரும் அனைத்து விமான சேவைகளும்  ரத்து செய்யப்பட்டிருக்கின்றன .