எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 மீனவர்கள் கைது
Mar 6, 2025, 22:11 IST1741279296913
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாம்பன் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக ஒரு விசை படகுடன் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைதான அனைவரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.


