தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அடாவடி

 
ஃப்

 தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கிறது.  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி செய்திருக்கிறது. 

 ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500 க்கும்  மேற்பட்ட இனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று இருந்தார்கள்.  இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சொல்லி இலங்கை கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.  அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஃபி

 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர்  பருத்தித்துறை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த 14 மீனவர்களும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களா அல்லது புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களா என்கிற விபரம் இனிமேல் தான்  தெரியவரும் என்று கூறப்படுகிறது.

 எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பின்னரும்,  கோரிக்கைகளை முன்வைத்த பின்னரும் கூட தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.