12-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்- மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தான் நினைத்த மதிப்பெண் பெறாததால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

suicide


திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அனிதா (17). தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்துள்ளார். அண்மையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனிதா 600-க்கு 435 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நன்றாக படித்து வந்த நிலையில். மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அனிதா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார், அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தான் நினைத்த  மதிப்பெண் விட குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.