அரசு பள்ளி மாணவர்கள் மோதல் - 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

 
death

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் முக்கூடல் அருகே இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு மாணவர் ஒருவர் கையில் கயிறு கட்டி வந்ததாக தெரிகிறது.  இதை மற்றொரு மாணவர் தரப்பு எதிர்த்த நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. 

tn

இதில் இரு தரப்பு மாணவர்களும் மோதிக்கொண்ட நிலையில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இதுகுறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அத்துடன் இது குறித்து விசாரித்து வந்தனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

Death

இந்நிலையில்  அம்பாசமுத்திரம் அருகே, பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.  சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் அந்த மாணவர் படுகாயமடைந்திருந்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் இன்று பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.