12 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -நிர்வாகி தலைமறைவு- பள்ளிக்கு ஒரு வாரம் லீவு

 
b

12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்ததால் பெற்றோர்கள் திரண்டு வந்து அந்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதை அடுத்து அந்த பள்ளியின் நிர்வாகி வினோத் தலைமறைவாகிவிட்டார்.   பெற்றோர்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த பதட்டமான சூழ்நிலையில் இந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் இபி காலணியில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி.    இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.    பள்ளியின் தாளாளர் மகன் வினோத்.   அவர்தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

ss

 பிளஸ் டூ மாணவிகளிடம் கவுன்சிலிங் இருப்பதாக சொல்லி தனியாக அழைத்து பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு  மாணவிக்கு கடந்த வாரம் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   தனக்கு நேர்ந்ததை சக மாணவிகளிடம் சொல்ல ,  அப்போதுதான் பள்ளியின் நிர்வாகி வினோத் தொடர்ந்து இப்படி செய்து வருவது தெரிய வந்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல,  பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதும்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   பள்ளி நிர்வாகி வினோத்தின் செயலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.   இதனால் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட  மாணவியர்களின் பெற்றோரை தடுத்து நிறுத்தினார்கள் . அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.   வினோத்தை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த அவர் தலைமறைவாகி விட்டார்.   பள்ளி மாணவிகள் பலரும் வினோத் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் .  இதை அடுத்து பள்ளியின் தாளாளர் வினோத் ஜெயராமன் மீது நாலு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .  

இதனால் பள்ளியில் ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தில் எடுத்து ஒரு வரம் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்.