தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

 
assembly

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நிர்வாக வசதிகளுக்காக தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வபோது தமிழக அரசு பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோரும்,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு உத்தரவு

வேளாண்துறை இயக்குநராக முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநராக குமாரவேல் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  உயர்கல்வித்துறை துணைச்செயலாளராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் வணிகத்துறை முதன்மைச்செயலாளராக பிரகாஷ் நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.