#Breaking 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Updated: Jan 27, 2024, 15:02 IST1706347963928
திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கொளத்தூர் துணை ஆணையராக பாண்டியராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி, சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் , சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.