உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

 
stalin

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர் சாதியினருக்கான 10 % இடஒதுக்கீடு விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்..  

பொருளாதாரத்தில் பின்தங்கிய  உயர்சாதி   வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம்  நேற்று தீர்ப்பு வழங்கியது. இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதேபொல் நாடு முழுவதிலிருந்தும்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.  

உயர் சாதியினருக்கான 10%  இட ஒதுக்கீடு தீர்ப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

இந்த நிலையில்  இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,  தங்கம் தென்னரசு. எ.வ.வேலு, கே.என்.நேரு,  திமுக எம்.பி.,  வில்சன் ,  தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.