“சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்” – டிஆர் பாலு எம்பி

 

“சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்” – டிஆர் பாலு எம்பி

கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தைக் காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அக்கடிதத்தில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் இக்கட்டான நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென தங்களை 20/05/2021 அன்று நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 91.34 லட்சம் தடுப்பூசிகளில், 72.12 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்ட 3.65 கோடி மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

“சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்” – டிஆர் பாலு எம்பி

இருந்தாலும் ஐந்து கோடி தமிழக மக்களுக்காவது செலுத்த, பல மாதங்களாகும் நிலையில், மீளாத மனித வள இழப்பிற்கு, தமிழகம் உள்ளாக நேரிடும். தமிழகத்தில் ஏற்கெனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 36,000க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வரின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் உபகரணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.

“சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்” – டிஆர் பாலு எம்பி

இந்நிலையில் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும், மிக அதிகளவில் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு அதிகப்படியான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள மிக மிக கவலைக்கிடமான நிலையில், நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும்.