திமுக எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை ; தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை - ஈபிஎஸ் அதிரடி!

 
eps

திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  பேசிய அவர் ,  பாசமுள்ள கட்சி அதிமுக. திமுக எம்எல்ஏக்கள் தன்னிடம் பேசி வருகின்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக தான் நடைபயணத்தை மேற்கொள்கிறார். திமுக குடும்ப கட்சி கார்ப்பரேட் மாடல் ,இதுதான் திராவிட மாடல். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மட்டுமே , எந்த பதவியும் இல்லாத அவர் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.  திமுக ஆட்சியில் மேயருக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை.தொண்டர்கள் மட்டும்தான் அதிமுக. தொண்டர்களால் நடத்தப்படும் அதிமுகவில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்  தொண்டன் என்ற முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். 

ep

அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்து விசாரணை.  நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது . அதற்குரிய நடவடிக்கை எடுக்கும்  முதலமைச்சரும் தமிழகத்தில் கிடையாது.  நீதிமன்றத்திற்கு சென்ற பிறகுதான் சிபிசிஐடி  விசாரணை மேற்கொள்கின்றனர். காவல்துறையினர் மெத்தன போக்காக  செயல்பட்டு வருகின்றனர். அதனால் அதிமுக வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.  திமுக அரசு ஒரு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு சான்றாக உள்ளது. அதிமுக அலுவலகத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தால் விசாரணை முறையாக நடைபெறவில்லை. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை .தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நாங்கள் தனியாக இருக்கிறோம்.

eps

பசியும் பட்டினமாக உள்ள ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது . அதை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்த்தலை ஆற்றில் ஆந்திர  அரசு தடுப்பணை கட்டுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. அணை கட்டுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களில் பிரதமரிடம் சொல்லி கைது செய்யப்பட்டவர்களை அதிமுக அரசின் மீட்டு வந்தது படகுகளை மீட்டுக் கொண்டு வந்தோம் " என்றார்.