அடங்காத திமுகவினர் ; காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் !

 

அடங்காத திமுகவினர் ; காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் !

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அடங்காத திமுகவினர் ; காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் !

சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, அண்ணா அறிவாலயம் முன்பு கூடிய திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடினர். அப்போது தொண்டர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் இருந்தனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னிலை அறிவிப்பு வரும் போது, தேர்தலுக்கு பிறகோ அரசியல் கட்சிகள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது என அறிவித்தது.

அடங்காத திமுகவினர் ; காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் !

இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி திமுகவினர் வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் படி கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால் நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையம் , கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.