ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் தலை துண்டித்து படுகொலை

 

ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் தலை துண்டித்து படுகொலை

திண்டுக்கல்லில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் தலை துண்டித்து படுகொலை

திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன் (38), இவரது மனைவி மார்க்ரெட். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. ஸ்டீபன் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் இவர் மீது பெண்களை வைத்து விபச்சாரம் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்டீபன் அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ஸ்டீபனை படுகொலை செய்து தலையை அங்கேயே போட்டுவிட்டு உடலை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வட்டப்பாறை என்னும் இடத்தில் வீசிவிட்டுச் சென்றனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டீபன் கொலைக்கு தொழில் போட்டி காரணமா அல்லது முன்பகை காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே நேற்று மட்டும் ஒரு பெண் உட்பட 2 பேர் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.