தனியார் பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்…

 

தனியார் பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்…

திருப்பூர்

திருப்பூரில் தனியார் பனியன் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து தேமடைந்தன.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் பேப்ரிகேஷன் ஆலை செயல்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை காரணமாக ஊழியர்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், நேற்று மாலை ஆலையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, சிறிதுநேரத்தில் ஆலையில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தனியார் பனியன் ஆலையில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்…

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த, தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த ஏராளமான இயந்திரங்கள், பனியன் துணிகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து நிறுவன உரிமையாளர் சரவணமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில், பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.