“அதிமுக ஆட்சியில் கோவில் சிலை திருட்டுகள் மறைப்பு” – வெளியான பகீர் தகவல்!

 

“அதிமுக ஆட்சியில் கோவில் சிலை திருட்டுகள் மறைப்பு” – வெளியான பகீர் தகவல்!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோவில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

“அதிமுக ஆட்சியில் கோவில் சிலை திருட்டுகள் மறைப்பு” – வெளியான பகீர் தகவல்!

அப்போது மனுதாரர் வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கடந்த ஆட்சியில் இந்த வழக்கில் அறநிலைய துறை தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகள், நகைகள் காணாமல் போகவில்லை என கூறி திருட்டுகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அறநிலைய துறை ஆணையருக்கு ஆவணங்கள், சிலைகள், நகைகள் மாயம் குறித்து மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“அதிமுக ஆட்சியில் கோவில் சிலை திருட்டுகள் மறைப்பு” – வெளியான பகீர் தகவல்!

இதையடுத்து நீதிபதிகள் அறநிலைய துறை ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனு மீது மனுதாரர் குற்றச்சாட்டுக்கள் தீவிரமாக உள்ளதால், மறுபரிசீலனை செய்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், காணாமல் போன சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.