தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் மிகக்கடும் புயலாக மாயிருந்த ஆம்பன் புயல் தற்போது வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புயல்  ஒடிசாவின் பாரதீப்பிலிருந்து தெற்கே 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளதாகவும், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

அதன் காரணமாக  வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தையும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொள்ளுமாம். அதனால் இந்தியா முழுவதும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

அதன் பின்னர் தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் வெப்பம் படிப்படியாக குறைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது ஆம்பன் புயலால் இன்னும் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.