வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமியை சிதைத்த கொடூர கும்பல்! இரு நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை!

 

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமியை சிதைத்த கொடூர கும்பல்! இரு நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை!

14 வயது சிறுமி ஒரு செங்கல் சூளையில் வைத்து தொடர்ந்து இரண்டு நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் மேற்கு பாட்னாவில் அரங்கேறியுள்ளது. சிறுமியின் புகாரின் அடிப்படையில், ஒரு பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஜார்க்கண்டின் சாஹெப்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுமியின் தந்தை இரு திருமணம் செய்துகொண்டுள்ளார். தந்தையின் இரண்டாவது மனைவி சிறுமியிடம் மிகவும் மோசமான அணுகுமுறையுடன் இருந்து வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார்.

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமியை சிதைத்த கொடூர கும்பல்! இரு நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை!

ரேணு தேவி (33) என்ற பெண் அந்தச் சிறுமியை சோனா ஈத் பட்டா என்ற செங்கல் சூளையில் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த மூன்று இளைஞர்கள் சிறுமியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

பின்னர் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ரேணு தேவி உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் நான்கு பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற நபர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.