“சுஷாந்த் சிங் இல்லாத உலகில் நானும் இருக்க விரும்பவில்லை “-நடிகர் சுஷாந்த் சிங் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்த டீனேஜ் பெண் ..

 

“சுஷாந்த் சிங் இல்லாத உலகில் நானும் இருக்க விரும்பவில்லை “-நடிகர் சுஷாந்த் சிங் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்த டீனேஜ் பெண் ..

நடிகர் சுஷாந்த்கின் தீவிர ரசிகையாக ஒரு டீனேஜ் பெண் அவரின் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியது .

“சுஷாந்த் சிங் இல்லாத உலகில் நானும் இருக்க விரும்பவில்லை “-நடிகர் சுஷாந்த் சிங் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்த டீனேஜ் பெண் ..சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது டீனேஜ் பெண் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தீவிர ரசிகை .அவரின் படங்களையும் ,பாடல்களையும் செல்போனில் டவுன் லோடு செய்து வைத்துக்கொண்டு எந்நேரமும் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார் .சமீபத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அவரின் மனதை பாதித்தது ,அவர் மறைந்த நாள் முதல் எந்நேரமும் சோகமாகவே காட்சியளித்தார் .

“சுஷாந்த் சிங் இல்லாத உலகில் நானும் இருக்க விரும்பவில்லை “-நடிகர் சுஷாந்த் சிங் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்த டீனேஜ் பெண் ..
கடந்த புதன்கிழமையன்று அவரின் பெற்றோர்கள் வெளியே போயிருந்தனர் ,அந்நேரத்தில் அந்த சிறுமி வீட்டில் உள்ள கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்த போது தங்களின் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள் ,விரைந்து வந்த போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .பிறகு அங்கிருந்த அந்த சிறுமி எழுதிய தற்கொலை குறிப்பை கைப்பற்றி படித்து பார்த்தார்கள் ,அதில் சுஷாந்த் சிங் இல்லாத உலகில் நானும் வாழ விரும்பவில்லை என்று எழுதியிருந்ததை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .