“சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கிட்டு வாடா” -மறுத்த சிறுவனுக்கு என்னாச்சி பாருங்க …!

 

“சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கிட்டு வாடா” -மறுத்த சிறுவனுக்கு என்னாச்சி பாருங்க …!

சாலையில் மது அருந்திக்கொண்டிருந்த ஒருவர், தனக்கு சைட் டிஷ் கிடைக்காத கோவத்தில் அந்த வழியாக வந்த ஒரு சிறுவனை கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

“சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கிட்டு வாடா” -மறுத்த சிறுவனுக்கு என்னாச்சி பாருங்க …!

தென்கிழக்கு டெல்லியின் கலிண்டி குஞ்ச் பகுதியில் புதன் கிழமையன்று ஒரு 14 வயதான சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தான் .அப்போது மதான்பூர் காதர் விரிவாக்கத்தில் வசிக்கும் ஷாதாப் என்ற 20 வயதான வாலிபர் சாலையோரம் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார் .அப்போது அவருக்கு சைட் டிஷ் தேவைப்பட்டது .அந்த நேரம் அந்த வழியாக வந்த அந்த 14 வயது சிறுவனிடம் அவர் தின்பண்டம் ஏதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்டுள்ளார் .அதற்கு அந்த சிறுவன் தன்னிடம் ஏதுமில்லை என்று கூறியுள்ளான் .அதனால் மது போதையிலிருந்த அந்த வாலிபர் அந்த சிறுவனிடம் தகராறு செய்துள்ளார் .
அதனால் அந்த சிறுவனை அவர் தாக்கியதில் அந்த இடத்திலேயே அந்த 14 வயது சிறுவன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி மயங்கி விழுந்தார் .அருகிருலிருந்தவர்கள் அந்த சிறுவனை அங்குள்ள அப்போலோ மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்க்கனவே இறந்து விட்டதாக அறிவித்தாரகள் .
இந்த கொலை சம்பவம் பற்றி அந்த பகுதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பொலிசார் விரைந்து வந்து சிறுவனின் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள் .மேலும் சிறுவனை கொலை செய்த மதான்பூர் காதர் விரிவாக்கத்தில் வசிக்கும் ஷாதாப் என்ற அந்த வாலிபரை கைது செய்தார்கள் .அவர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .சிறுவனின் உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலில் பல காயங்கள் ஏற்பட்ட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

“சரக்கடிக்க சைட் டிஷ் வாங்கிட்டு வாடா” -மறுத்த சிறுவனுக்கு என்னாச்சி பாருங்க …!