“பரீட்சை நடக்கும்போது பலாத்காரம் “-கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் நடந்த கொடுமை…

 

“பரீட்சை நடக்கும்போது பலாத்காரம் “-கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் நடந்த கொடுமை…

ஒரு கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் பாதுகாப்பு இருக்கும் போதே ஒரு கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிவில் சர்வீஸ் எக்ஸாம் நடந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது .அந்த நேரத்தில் அந்த கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ஒரு மாணவி அந்த கல்லூரிக்கு தன்னுடைய தோழியை தேடி வந்துள்ளார் .அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் 12 மாணவர்கள் அந்த மாணவியை வற்புறுத்தி அங்குள்ள ஒரு வகுப்பறைக்குள் இழுத்து சென்றார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணிடமிருந்து பணத்தை கொள்ளையயடித்தார்கள் .மேலும் அதில் ஒரு மாணவர் அங்கேயே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் .அந்த காட்சியை மற்ற மாணவர்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்தார்கள் .அதன் பிறகு அந்த மாணவி கல்லூரிக்குள் அழுது கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த பெண்ணிடம் விசாரித்தார் .

அப்போது அந்த பெண் தனக்கு இந்த கல்லூரியில் மற்ற மாணவர்கள் மூலமாக நடந்த கொடுமையை விவரித்தார் .அதை கேட்டு அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது .அப்போது போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், முக்கிய குற்றவாளிகள் ரோஹித் சைனி மற்றும் பாரத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

“பரீட்சை நடக்கும்போது பலாத்காரம் “-கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் நடந்த கொடுமை…