கரூரில் இளம்பெண் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!

 

கரூரில் இளம்பெண் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!

கரூர்

கரூரில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அடுத்து ஐந்து ரோடு ரயில்வே தண்டவாளம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள், கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கருர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கரூரில் இளம்பெண் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை!

அப்போது, தற்கொலை செய்துகொண்ட பெண் பாலமாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் லோகாம்பாள் (25) என்பது தெரியவந்து. கரூர் அடுத்த சர்ச் கார்னர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வரும் அவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில், ரயில் தண்வாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் லோகாம்பாள் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.