குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

திருச்சி

திருச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வசித்து வருபவர் ஜெகதீசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி அஜிதா. கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஜிதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், அஜிதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை!

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெகதீசன் – அஜிதா இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த லால்குடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அஜிதாவின் உடலில் அடிபட்ட காயங்கள் இருப்பதால், கணவர் ஜெகதீசன் மீது கொலை வழக்குப்பதிந்து, அவரை கைதுசெய்ய வேண்டுமென அஜிதாவின் உறவினர்கள் நேற்று லால்குடி ரவுண்டானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, அங்கு வந்த லால்குடி டிஎஸ்பி சீதாராமன், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.