“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

 

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை


ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .


தெலுங்கானாவின் ஜகித்தால் மாவட்டத்தில் உள்ள பல்வந்தபூர் கிராமத்தில் வசிக்கும் ஜெகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் .அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரிடம் மென்பொருள் பொறியாளரான அவரின் மைத்துனர் பவன் அவரை கொலை செய்து விடுவதாக ஒரு சண்டையின் போது கூறியுள்ளார் .அதன் பிறகு திடீரென ஜெகன் மாரடைப்பில் இறக்கவே அவரின் மனைவி தன்னுடைய கணவரை மாமா பவன்தான் சூனியம் வைத்து கொன்று விட்டார் என்று சந்தேகப்பட்டார் .
அதனால் கடந்த வாரம் திங்களன்று ஜெகன் மரணத்தை பற்றி துக்கம் விசாரிக்க அவரின் மனைவியை பார்க்க வந்தார் பவன் . அப்போது இறந்த ஜெகனின் மனைவி சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு அவரை ஒரு கயிறால் கட்டினார் .பின்னர் அவரின் உடம்பில் தீ வைத்து கொளுத்தினார் .அப்போது அவரின் மனைவி வெளியே சென்றிருந்தார் .பிறகு அவரின் மனைவி ஓடி வந்து பாத்தபோது அவரின் கணவர் தீயில் எரிந்து கொண்டிருந்தார் .அதை பார்த்து அவரை காப்பாற்ற அவர் ஓடிய போது, அதற்குள் அவர் தீயில் கருகிவிட்டார் .
பின்னர் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு பவனை காப்பாற்ற ஹாஸ்ப்பிடளுக்கு தூக்கி சென்றார்கள் .ஆனால் ஒரு தீ காயமுள்ள பவனின் உடம்பை பரிசோதனை செய்து டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள் .அதனால் அவரின் மனைவி அவரை கொன்ற உறவினர்கள் மீது போலிஸில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை