வந்தாச்சு புது அப்டேட்! வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி!

 
whatsapp

பயனர்கள் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும்.  2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது.  இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா  19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.  பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம். இந்த அம்சம் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.