பாஸ் ஆகனும்னா… என் இச்சைக்கு இணங்கு! ஆசிரியர் போக்சோவில் கைது

 

பாஸ் ஆகனும்னா… என் இச்சைக்கு இணங்கு! ஆசிரியர் போக்சோவில் கைது

தேர்ச்சி பெற வைக்க மாட்டேன் என மிரட்டி மாணவியை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாஸ் ஆகனும்னா… என் இச்சைக்கு இணங்கு! ஆசிரியர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(31). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிலையில், அப்போது அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதோடு மதிப்பெண்ணை குறைத்து விடுவேன், தேர்ச்சி பெற வைக்க மாட்டேன் என மிரட்டி பல்வேறு விதமான நெருக்கடிகளை கொடுத்து உள்ளார்.

இதற்கிடையே ஆசிரியர் வெங்கடேசனை பள்ளி நிர்வாகம் திடீரென வேலையில் இருந்து நீக்கியது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார், பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் வெங்கடேசனின் பாலியல் அத்துமீறலால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார், தற்போது ஆறு மாத கர்ப்பமான மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அன்பரசி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகி உள்ளது, இதை மாணவியிடம் மறைத்து உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி நாடகமாடி பலாத்காரம் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.