காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் சங்க செயலாளர் கொரோனாவால் பலி!

 

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் சங்க செயலாளர் கொரோனாவால் பலி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 4,985 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருப்பினும் சென்னையில் 70க்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டதாகவும் 15 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் சங்க செயலாளர் கொரோனாவால் பலி!

இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியான கொரோனா தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழக அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வந்த நிலையில், அதனை ஈடுகட்ட கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் சங்க செயலாளர் ராஜா கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.