தீபாவளி பண்டிகை – டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை

 

தீபாவளி பண்டிகை – டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில 466 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது. அனைத்து ஊர்களிலும் உள்ள மதுக்கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பீர் உள்ளிட்ட மதுபானங்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை – டாஸ்மாக்கில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை

அதனால், நேற்றும் இன்றும் மதுக்கடைகளில் 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. இது வழக்கத்தை விட கூடுதலான விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரையில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கும், சென்னையில் 94 கோடியே 36 லட்சத்தும், திருச்சியில் 95 கோடியே 47 லட்சத்துக்கும், சேலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 84 கோடியே 56 லட்சத்துக்கும் விற்பனையாகியுள்ளது.