நெருங்கும் தீபாவளி : டாஸ்மாக் பார்கள் திறப்பு?

 

நெருங்கும் தீபாவளி : டாஸ்மாக் பார்கள் திறப்பு?

தீபாவளிக்கு முன் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தீபாவளி : டாஸ்மாக் பார்கள் திறப்பு?

தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து 3 ஆயிரம் பார்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் தமிழகத்தில் இன்னும் பார்கள் திறக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதமே பார்கள் திறக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அது குறித்த எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

நெருங்கும் தீபாவளி : டாஸ்மாக் பார்கள் திறப்பு?

இந்நிலையில், தீபாவளிக்கு முன்பாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். இதனால் கொரோனா பரவலுக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா கட்டுப்பட்டு நெறிமுறைகளுடன் பார்கள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்படும். இங்கு சமூக இடைவெளி, முகக்கவசம், குறைந்த ஆட்களுக்கு அனுமதி என செயல்பட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.