வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, தஞ்சை ஆட்சியர் நிதியுதவி

 

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, தஞ்சை ஆட்சியர் நிதியுதவி

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு, தஞ்சை ஆட்சியர் நிதியுதவி

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பூதலூர் வட்டம் கீழத்திருழாபட்டியை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், வெளிநாட்டில் பணியின்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரரான கும்பகோணம் வட்டம் தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் சட்டப்படியாக வழங்க வேண்டிய நிலுவை தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதேபோல், விநோத நோயால் பாதிக்கப்பட்ட பூதலூர் வட்டம் நடுத்தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் உடனிருந்தார்.