அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு- தஞ்சையில் பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டம்
Dec 15, 2020, 11:11 IST1608010863000
தஞ்சாவூர்
அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, தஞ்சையில் அந்த கட்சியினர் பாட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளது.
முந்தைய சின்னமே மீண்டும் கிடைத்துள்ளதால், அந்த கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையொட்டி, தஞ்சையில் ரயில்நிலையம் முன்பு திண்ட நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பட்டாசுகளை வெடித்தும், குக்கரை தலையில் வைத்துக்கொண்டும் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.