தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் டெல்லி பயணம்!
Nov 4, 2020, 08:44 IST1604459699000
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லியில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை அவர் மரியாதையை நிமித்தமாக சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 7.5% இடஒதுக்கீட்டிற்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் ஆளுநரை சுற்றி நடந்து வருகிறது. அதேசமயம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்து பேசிய நிலையில் ஆளுநர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அரசியல் களத்தில் கவனத்தை பெற்றுள்ளது.