கோபாலபுரம் இல்லத்தில்… கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

கோபாலபுரம் இல்லத்தில்… கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நிறைவேறி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ ஆகிய நான் என்று அவர் கூறும் போது அரங்கத்தில் கர கோஷங்கள் ஒலித்தது. ஸ்டாலினின் நா தழுதழுத்தது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

கோபாலபுரம் இல்லத்தில்… கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலினுக்கும் அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார். பதவியேற்பு விழாவுக்கு பின்னர், அங்கிருந்து நேராக கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் புகைப்படத்தை கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினார். அப்போது, ஸ்டாலினின் கண்கள் கலங்கியது. உடனே ஸ்டாலினின் சகோதரி, அவரை தேற்றினார். பின்னர், தயாளு அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

கோபாலபுரம் இல்லத்தில்… கண்கலங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்ட ஸ்டாலின், மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் இல்லத்துக்கு செல்கிறார். பின்னர், அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்துக்கு சென்று ஆசிபெற்ற பிறகு, தலைமை செயலகத்துக்கு செல்லவிருக்கிறார். முதல்வராக பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் 3 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.