“எஸ்.பி.பியின் குரல் இனி விண்ணுலகில் ஒலிக்கும்” தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

 

“எஸ்.பி.பியின் குரல் இனி விண்ணுலகில் ஒலிக்கும்” தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

பிரபல பாடகர் எஸ்.பி.பியின் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பிபிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் என்றும் உடல்நலக்குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என திரையுலகினரும் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் பிரார்த்தித்து வந்தனர். இந்த சூழலில் தான், எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று திடீர் அறிக்கை வெளியானது.

“எஸ்.பி.பியின் குரல் இனி விண்ணுலகில் ஒலிக்கும்” தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

இசை அவரை மீட்டுக் கொண்டு வரும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், பேரதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது இரங்கல் செய்தி இன்று பிற்பகல் வெளியானது. பாடும் நிலா எஸ்பிபி இறைவனடி சேர்ந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், “பிரபல பாடகர் எஸ்பபியை விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ? என்றே நினைக்க தோன்றுகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.