நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!

 

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதுக்கு தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!

நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ளது. இதில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது.மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், நீர் மேலாண்மையில் தென் இந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததில் சிறந்த மாவட்டமாக வேலூர், கரூர் மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன. அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது.

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!

நீர்நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது.