“தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு”… முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

 

“தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு”… முதல்வர் பழனிசாமி  பெருமிதம்!

தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளதற்கு முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு”… முதல்வர் பழனிசாமி  பெருமிதம்!

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே பத்திரிகையின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆட்சியை வழங்கும் பெரிய மாநிலங்களில் 3வது முறையாக தமிழகம் தேர்வாகி உள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு விருது வழங்கப்படவுள்ளது. இந்த செய்தியை அறிந்த அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்! ” என்று பதிவிட்டுள்ளார்.