பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்! – டி.டி.வி.தினகரன் கோரிக்கை
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனாவால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல்,டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
கொரோனாவால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல்,டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. 1/3 #PetrolPriceHike
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 25, 2020
இதனால் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு, பெட்ரோல்,டீசல் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அண்மையில் உயர்த்தப்பட்ட வாட் வரியைக் குறைப்பதன் மூலம் தமிழக அரசும் மக்களின் சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.