பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

 

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் .அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கூறுவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டுமே தவிர அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல .

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர் ,பேரறிஞர் அண்ணா ,கலைஞர் கருணாநிதி தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம் ,நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே முன்னாள் பிரதமரை படுகொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது ” என்று காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எழுவரை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விடுதலை செய்யக்கோரி கூறி வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசியல் களத்தில் பேசும் பொருளாகியுள்ளது.