கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய வட்டாச்சியர் மரணம்!

 

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய வட்டாச்சியர் மரணம்!

வேலூர் மாவட்டம் அணைகட்டு வட்டாட்சியர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியே 64 லட்சமாக அதிகரித்துள்ளது. 8 லட்சத்து 71 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய வட்டாச்சியர் மரணம்!

இந்நிலையில் அணைகட்டு வட்டாட்சியர் முரளிகுமார்(53) கடந்த மாதம் 30 ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நோய் தொற்று குணமடைந்ததால் நேற்று அவர் வீடு திரும்பிய நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.