இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

 

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலை ஆக்கிரமித்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர்களால் முழுமையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் என சொல்லப்படுகிறது. தலிபான்களுக்குள் வெவ்வேறு தனிக்குழுக்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளன.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!

ஆனால் தலிபான்கள் தரப்போ அதனை திட்டவட்டமாக மறுக்கிறது. அதேபோல இதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க இடைக்கால அரசை அறிவித்தது. அதன்படி தலிபான்களின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட கவுன்சில் தலைவரான முல்லா ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டார். இவர் ஐநாவால் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதி. இவரைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மூளையாக செயல்பட்ட முல்லா பரதாரும் மவுல்வி ஹவி ஹனாவி ஆகிய இருவரும் துணை பிரதமர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!
முல்லா பரதார்

இவர்கள் தவிர தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் இலாகா ஒதுக்கப்பட்டது. பதவியைப் பிடிக்க பிரச்சினைகள் செய்த ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜ் ஹக்கானிக்கு அதிகாரமிக்க உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு சரிக்கட்டப்பட்டது. இவர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். மவுல்வி அமீர் கானுக்கு வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இணை அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

இதில் கூட பெண்களுக்கு இடமில்லையா? – தலிபான்களின் அடுத்த பிம்பிளிக்கி பிளாப்பி!
ஹசன் முகுந்த்

இந்தப் பட்டியலில் பெண்களுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம் போல பிம்பிளிக்கி பிளாபி என மறைமுகமாக சொல்லியிருக்கின்றனர் தலிபான்கள். ஒரு பெண் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதிகாரத்திற்கு வரும் முன் பெண்களுக்கு அது கொடுப்போம், இது கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டிருக்கின்றனர். இதற்கு பெண்கள் தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு விளக்கமளித்த செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் அமைச்சரவை விரிவாக்கம் இனிவரும் காலங்களில் நடக்கும்போது, பெண்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என கூறினார்.