இந்த அறிகுறிகளை வச்சி ,உங்க உடம்புல ஒளிஞ்சிருக்கும் நோயை பத்தி தெரிஞ்சிக்கோங்க

 

இந்த அறிகுறிகளை வச்சி ,உங்க உடம்புல ஒளிஞ்சிருக்கும் நோயை பத்தி தெரிஞ்சிக்கோங்க

கண்களை சுற்றி வீக்கம் இருப்பது :

இது சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

இந்த அறிகுறிகளை வச்சி ,உங்க உடம்புல ஒளிஞ்சிருக்கும் நோயை பத்தி தெரிஞ்சிக்கோங்க

இதை சரி செய்ய உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

இதற்கு இருதய நோய் இருப்பது காரணமாக இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

இது கல்லீரல் நோய்க்கான அறிகுறி . கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

இதற்கு பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கீழ் முதுகுவலி:

இதற்கு பல காரணங்களைக் கூற முடியும். முட்டுவலி பிரச்சனை, தண்டு வட பாதிப்பு, சிறுநீரகக் கற்கள் என பல காரணங்களைக் கூறலாம். நீங்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்கா விட்டால் கூட முதுகு வலி இருக்கும். தண்டு வடத்தின் குஷன் போன்ற அமைப்பு நீரின் அளவினைப் பொறுத்தே அமையும்.

திடீர் என கோபம்:

சிலருக்கு திடீர்   திடீர் என கோபம்வெடிக்கின்றதா? ஏன் இப்படி நடந்து கொள்கின்றோம் என்று பிறகு வருத்தப்படுகின்றீர்களா? இது மனதிற்குள் அடக்கிய ஏதோ ஒரு மன உளைச்சல் காரணமாக இருக்கக் கூடும். அதை அப்படியே விட்டு விட்டால் உடல் பாதிப்பு ஏற்படும். எனவே காரணத்தினை கண்டறிந்து நிவர்த்தி தேடுங்கள்.

பல்பாதிப்பு:

நிறைய பேருக்கு பல்லில் திடீரென எனாமல் தேய்ந்து விட்டது என பல் டாக்டர் கூறுவதினை கேட்டு வருந்துவர். இவர்களுக்கு பல் கூச்சம், குளிர்ந்த சூடான பானங்களை குடிக்க இயலாமை ஆகியவை ஏற்படும். இதற்கு காரணம் இவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் ‘ஆசிட்’ அதாவது நெஞ்செரிச்சல் காரணமாக இருக்கும்.

நெஞ்செரிச்சல்:

பலருக்கு இந்த நெஞ்செரிச்சல் பாதிப்பை உணர முடியும். அதற்கான சிகிச்சையினையும், உணவு மாற்றத்தினையும் எடுத்துக் கொள்வர். சிலர் இந்த ஆசிட் பாதிப்பினை உணராது இருப்பர். இரவில் இவர்கள் படுக்கும் பொழுது இந்த ஆசிட் உணவுக்குழாய் வழியாக மேலேறி வாயின் உட்புறம் அதாவது பற்களின் உட்புறத்தினை இந்த ஆசிட் அரித்து விடும். பற்களில் எனாமல் தேய்ந்து விட்டது என்றால் முதலில் உங்கள் குடலினை கவனியுங்கள்.