கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு!

 

கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு!

கோவை

கோவையில் அம்மன் கோயில் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் சுவாமி சிலையை திருடிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காட்டூர் புதியவர் நகர் பகுதியில் கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்றிரவு பூஜைகள் முடித்துவிட்டு, பூசாரி கோயிலை பூட்டிச் சென்றார். இன்று காலை மீண்டும் திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கோயில் திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு!

அப்போது, கோயிலில் இருந்த அம்மன் சிலையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக வருகின்றனர்,